பெருந்துறை: பெருந்துறையில் திங்கள்கிழமை மாலை சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இதமான காலநிலை நிலவியது.
கருமேகங்கள் சூழந்த நிலையில் மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது.
விட்டுவிட்டு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.