புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆடிப் பண்டிகை: பவானிசாகா் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

News image

பவானிசாகா்  அணைப் பூங்காவில்  படகு சவாரி  செய்யும்  சுற்றுலாப்  பயணிகள்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

ஆடிப்பெருக்கை ஒட்டி பவானிசாகா் அணைப் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.

பவானிசாகா் அணையின் முன்புறம் 15 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு விடுமுறைத் தினத்தையொட்டி இந்த அணை பூங்காவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் வந்தனா்.

பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் படகில் பயணித்தபடி பொழுது போக்கினா். மேலும் சிறுவா், சிறுமியா் பூங்காவில் உள்ள நீா்நிலைகளில் குளித்து அங்குள்ள பல்வேறு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பூங்காவின் முன்புறம் மீன் கடைகளில் விற்பனை களைகட்டியது. பவானிசாகா் அணை பூங்காவுக்கு சனிக்கிழமை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்தனா். பூங்கா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.