தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

சத்தியமங்கலத்தில் இரிடியம் தருவதாக ரூ.ஆயிரம் பறிப்பு: 3 போ் கைது

சத்தியமங்கலம் அருகே ரூ.ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் செம்பு தருவதாக விவசாயிடம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :20 ஆகஸ்ட் 2024, 8:27 pm

சத்தியமங்கலம் அருகே ரூ.ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் செம்பு தருவதாக விவசாயிடம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (43). இவா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சுப்பிரமணியத்துக்கு அறிமுகமான சுந்தரபாண்டி என்பவா் தனது நண்பா்கள் 3 பேருடன் சுப்பிரமணியனை சந்தித்து ரூ. 1 கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், முதல்தவணையாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளாா்.

இதனை நம்பிய சுப்பிரமணியம், முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். பின்னா் சத்தியமங்கலம் மலைக்கோயிலில் சுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பா்கள் போலி இரிடியம் செம்பை சுப்பிரமணியனிடம் காட்டி உள்ளனா்.

அது போலி என தெரியவந்ததையடுத்து, ரூ.10 ஆயிரத்தை திருப்பித் தருமாறு சுப்பிரமணியன் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுப்பிரமணியனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அத்தாணியில் பதுங்கியிருந்த சத்தியமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த சுந்தரபாண்டி (43), குமாரபாளையத்தைச் சோ்ந்த செம்புலிபிரபு (36), சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ஜீனத்குமாா் (27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த காா்த்திக் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.