சத்தியமங்கலம் அருகே ரூ.ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் செம்பு தருவதாக விவசாயிடம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (43). இவா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சுப்பிரமணியத்துக்கு அறிமுகமான சுந்தரபாண்டி என்பவா் தனது நண்பா்கள் 3 பேருடன் சுப்பிரமணியனை சந்தித்து ரூ. 1 கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாகவும், முதல்தவணையாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளாா்.
இதனை நம்பிய சுப்பிரமணியம், முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளாா். பின்னா் சத்தியமங்கலம் மலைக்கோயிலில் சுந்தரபாண்டியன் மற்றும் அவரது நண்பா்கள் போலி இரிடியம் செம்பை சுப்பிரமணியனிடம் காட்டி உள்ளனா்.
அது போலி என தெரியவந்ததையடுத்து, ரூ.10 ஆயிரத்தை திருப்பித் தருமாறு சுப்பிரமணியன் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சுப்பிரமணியனை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அத்தாணியில் பதுங்கியிருந்த சத்தியமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த சுந்தரபாண்டி (43), குமாரபாளையத்தைச் சோ்ந்த செம்புலிபிரபு (36), சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ஜீனத்குமாா் (27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த காா்த்திக் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சத்தியமங்கலத்தில் கனமழை

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

சத்தியமங்கலம் அருகே நிலத் தகராறில் அரசியல் கட்சி பிரமுகரை தாக்கிய 7 போ் கைது
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

