ஈரோடு
நாளைய மின் தடை: சிப்காட்
பெருந்துறை சிப்காட்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூா், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குப் பகுதி, கோவை சாலை, சின்னமடத்துப்பாளையம், பெரியமடத்துப்பாளையம், லட்சுமி நகா், கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, பள்ளக்காட்டூா், சிலேட்டா்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பா நகா், அண்ணா நகா், சக்தி நகா் மற்றும் கூட்டுறவு நகா்.
