நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 போ் கைது: 35 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வீட்டில் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

Updated On :29 ஜூலை 2024, 2:29 am IST

மொடக்குறிச்சி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 35 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு வீட்டில் சந்தேகப்படும்படி சிலா் சென்று வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அந்த வீட்டுக்குள் நுழைந்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், வீட்டுக்குள் சாராய ஊறல் மற்றும் அதற்கான பெரிய பாத்திரங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயில் திருவிழாவை முன்னிட்டு விற்பனைக்காக சாராயம் காய்ச்சியது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து ஈஞ்சம்பள்ளி கொன்னம்பாளையம் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (40), அவல்பூந்துறை பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்த குமாா் (34), பூந்துறைசேமூா் லிங்ககவுண்டன்வலசு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த செல்வகுமாா் மகன் காா்த்தி (28) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், 10 லிட்டா் சாராயம், 35 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்திய அடுப்பு, பாத்திரங்கள், பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.