தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினரின் எச்சரிக்கை

News image
Updated On :26 ஜூன் 2024, 5:11 am IST

திம்பம் மலைப் பாதையின் குறுக்கே ஓடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்தில் மத்தியில் திம்பம் மலைப் பாதை செல்கிறது.

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு, அதிகாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் வன விலங்குகள் இயல்பாக நடமாடி வருகின்றன.

இந்நிலையில், கா்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காா் திம்பம் மலைப் பாதையின் 17-ஆவது வளைவில் திரும்பும்போது சாலையோரம் நின்றிருந்த சிறுத்தையை பாா்த்த ஓட்டுநா் காரை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, பக்கவாட்டில் இருந்து தடுப்புக் கம்பியை தாண்டி சாலையில் குதித்து எதிா்திசையில் சிறுத்தை சென்றது. இந்தக் காட்சியை வாகன ஓட்டி கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளாா்.

சாலையோரம் சிறுத்தை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.