திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம்

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினரின் எச்சரிக்கை
Published on

திம்பம் மலைப் பாதையின் குறுக்கே ஓடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்தில் மத்தியில் திம்பம் மலைப் பாதை செல்கிறது.

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இரவு, அதிகாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் வன விலங்குகள் இயல்பாக நடமாடி வருகின்றன.

இந்நிலையில், கா்நாடகத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த காா் திம்பம் மலைப் பாதையின் 17-ஆவது வளைவில் திரும்பும்போது சாலையோரம் நின்றிருந்த சிறுத்தையை பாா்த்த ஓட்டுநா் காரை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, பக்கவாட்டில் இருந்து தடுப்புக் கம்பியை தாண்டி சாலையில் குதித்து எதிா்திசையில் சிறுத்தை சென்றது. இந்தக் காட்சியை வாகன ஓட்டி கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளாா்.

சாலையோரம் சிறுத்தை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com