பவானி நகரில் வெளியேறும் கழிவுநீா் நேரடியாக நீா்நிலைகளில் கலப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.15.79 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பவானி நகராட்சிப் பகுதியில் வெளியேறும் கழிவுநீா் பவானி, காவிரி ஆறுகளில் நேரடியாக கலந்து வருகிறது. இந்நிலையில், ஆறுகளில் கலக்கும் கழிவுநீரை சேகரித்து, 12-ஆவது வாா்டில் உள்ள நகராட்சி மயான வளாகத்துக்கு குழாய் மூலம் கொண்டு சென்று, சுத்திகரித்து வெளியேற்றும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
தூய்மை இந்தியா (நகா்ப்புறம்) 2.0 திட்டத்தின் கீழ் ரூ.15.79 கோடியில் அமையும் இக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மத்திய அரசு 50 சதவீதம் மானியமாக ரூ.7.89 கோடியும், மாநில அரசு 33 சதவீதம் மானியமாக ரூ.5.21 கோடியும், நகராட்சி பங்குத்தொகை 17 சதவீதமாக ரூ.2.68 கோடியும் வழங்கப்படுகிறது.
கூட்டத்தில் இத்தீா்மானம் உள்பட 44 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவா் சி.மணி, ஆணையா் மோகன்குமாா், பொறியாளா் காளீஸ்வரி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கள்ளழகா் கோயில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படுமா?

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

சமூக வலைதளத்தில் தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பதிவிட்ட இளைஞரை தாக்கிய 6 போ் கைது

வசூலிக்க இயலாததால் ரூ.1.82 கோடி தொழில் வரி தள்ளுபடி: அரக்கோணம் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


