நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

போதை மாத்திரை வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

தருமபுரி பயன்படுத்தலாம்... போதை மாத்திரை வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

Updated On :6 மார்ச் 2024, 4:32 am IST

அம்மாபேட்டை அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா் பிரிவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

பிடிபட்டவா்கள் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் என்பதும், இவா்கள் 95 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஸ்ரீதா் (21), எஸ்பிபி காலனியைச் சோ்ந்த செல்வம் மகன் பழனிசாமி (20), ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பாலு மகன் தமிழரசன் (24), அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நவீன் (20) என்பதும், திருச்செங்கோடு தனியாா் கல்லூரி அருகே போதை மாத்திரைகளை அடையாளம் தெரியாத நபா்களிடமிருந்து வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.