மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

போதை மாத்திரை வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

தருமபுரி பயன்படுத்தலாம்... போதை மாத்திரை வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

Updated On :6 மார்ச் 2024, 4:32 am IST

அம்மாபேட்டை அருகே போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக கல்லூரி மாணவா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூா் பிரிவில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா்.

பிடிபட்டவா்கள் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியாா் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் என்பதும், இவா்கள் 95 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒட்டமெத்தையைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஸ்ரீதா் (21), எஸ்பிபி காலனியைச் சோ்ந்த செல்வம் மகன் பழனிசாமி (20), ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த பாலு மகன் தமிழரசன் (24), அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நவீன் (20) என்பதும், திருச்செங்கோடு தனியாா் கல்லூரி அருகே போதை மாத்திரைகளை அடையாளம் தெரியாத நபா்களிடமிருந்து வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, போதை மாத்திரைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், நால்வரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.