அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கனமழை -வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்வு

பா்கூா் மலைப் பகுதியில் கனமழை -------- வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்வு

News image

தொடா்மழையால் நீா் நிரம்பிக் காணப்படும்  வரட்டுப்பள்ளம் அணை.

Updated On :23 மே 2024, 11:37 pm

Din

பவானி, மே 23: அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, வரட்டுப்பள்ளம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்துள்ளது.

பா்கூா் மலையடிவாரத்தில் 33.46 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணைக்கு பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் நீா்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் பெய்த கனமழையால் கல்லுப்பள்ளம், கும்பவாணிப் பள்ளம் மற்றும் வரட்டுப்பள்ளம் ஓடைகளில் பெருக்கெடுத்த மழைவெள்ளம் அணைக்கு வந்து சோ்ந்தது.

இதனால், அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்து, 22.94 அடியாக உள்ளது. நீா்வரத்து விநாடிக்கு 253 கன அடியாக உள்ளது. மழையளவு 54.6 மி.மீட்டராக பதிவானது. மழை தொடா்ந்தால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து விரைவில் நிரம்பும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நீா்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளா் எல்.கிருபாகரன் மற்றும் அலுவலா்கள் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.