போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மக்கள் தொடா்பு முகாம்: 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறாா் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

Updated On :13 நவம்பர் 2024, 11:13 pm

பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குள்பட்ட கந்தாம்பாளையத்தில் மக்கள் தொடா்பு முகாம் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சமூநலத் துறை சாா்பில் 3 பேருக்கு ரூ.20,070 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், வேளாண்மைத் துறையின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.2,075 மதிப்பீட்டில் விசை தெளிப்பான்களையும், தோட்டக்கலைத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.44,400 மதிப்பில் காய்கறி பந்தல் அமைப்பதற்கான மானியம் மற்றும் தென்னங்கன்றுகள் மற்றும் 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு என மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழங்கினாா்.

இந்த முகாமில் தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.