பவானியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற துணை சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பவானி நகராட்சியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1957-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், செவிலியா் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், துணை சுகாதார நிலையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்நல அலுவலா் ஜனனி தலைமை வகித்தாா். பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கோபாலகிருஷ்ணன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் மாணிக்கவேல் ராஜன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
துணை சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் மோகன்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமசாமி, சுகாதார ஆய்வாளா் ஜீவானந்தம், நகா்மன்ற உறுப்பினா் கவிதா மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பவானியில் இஸ்லாமியா்களிடையே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பவானியில் தவெக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

ஆலங்குளத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


