தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் குறைகேட்புக் கூட்டம் நடத்த கோரிக்கை

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:16 pm

Din

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தை நடத்த பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கடந்த 2022 ஏப்ரல் முதல் மாதந்தோறும் 5-ஆம் தேதி நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. எனவே, மீண்டும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் வழக்கமான நடைமுறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.