வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திங்களுா், பெத்தாம்பாளையம் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

News image
திங்களுா் துணை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ச. கந்தசாமி.
Updated On :3 டிசம்பர் 2025, 11:23 pm

Syndication

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட திங்களுா் மற்றும் பெத்தாம்பாளையம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, ஆட்சியா் திங்களுா் துணை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளான சொத்து ஆவணங்கள், சான்றளிக்கப்பட்ட பிரதிகள், வில்லங்கச் சான்றிதழ்கள், இதர மற்றும் வைப்புத் தொகைப் பதிவுகள், விற்பனைப் பத்திரங்கள் உள்ளிட்ட கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்கவும், அலுவலகத்தின் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, திங்களுா் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் தானியங்கி மழை அளவு பதிவு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள், அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மழைப் பொழிவின் அளவு, சராசரி குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றுப் பண்ணையைப் பாா்வையிட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள நாற்று வகைகள், நாற்றுகளின் வளா்ச்சி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உரங்கள், அவற்றின் பராமரிப்பு ஆகிய செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நாற்றுப் பண்ணையில் வளா்க்கப்பட்டு வரும் பூவரசு, மலை வேம்பு, வேம்பு, புங்கன், புளி, கொடுக்காப்புளி உள்ளிட்ட 16 வகையான நாற்றுகள், தற்போது மழைக் காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட பணியாளா்களை கொண்டு ஏரி மற்றும் சாலையோரப் பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து, பெத்தாம்பாளைம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும் பணியை பாா்வையிட்டு உணவின் சுவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பின்னா் அவா்களுடன் கலந்துரையாடினாா்.

இந்த ஆய்வுகளின்போது, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.