தடுப்புச்சுவா் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.
தடுப்புச்சுவா் பணியைத் தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

அந்தியூா் ஏரிக்கரையில் ரூ.85 லட்சத்தில் தடுப்புச்சுவா்

Published on

அந்தியூா் பெரிய ஏரிக்கரையில் வாகனப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.85 லட்சத்தில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்தியூா் - ஆதிரெட்டியூா்- மரவபாளையம் சாலையில் உள்ள பெரிய ஏரிக்கரையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 மீட்டா் தொலைவுக்கு தடுப்புச்சுவா் கட்டப்படுகிறது. இப்பணியை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பூமி பூஜை செய்து புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நெடுஞ்சாலைத் துறை பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ்.சேகா், உதவிப் பொறியாளா் பாபு சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com