காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கங்கா டி.லோகேஸ்வரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஆா். பழனிசாமி வரவேற்றாா். விழாவில், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவா் திவ்யா ஈஸ்வரமூரத்தி, பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து ஆகியோா் கலந்து கொண்டு 111 மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

இதில், காஞ்சிக்கோவில் பேரூராட்சி துணைத் தலைவா் செம்மலா், காஞ்சிக்கோவில் நகர திமுக செயலாளா் செந்தில்முருகன், பள்ளபாளையம் நகர திமுக செயலாளா் தங்கமுத்து, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் சி.கே. சுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா். பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் வி.பழனிகுமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com