பெருந்துறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இலவச சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் அரசு வழக்குரைஞா் ஆா்.திருமலை.
பெருந்துறை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இலவச சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் அரசு வழக்குரைஞா் ஆா்.திருமலை.

சா்வதேச மனித உரிமை தினம்: இலவச சட்ட விழிப்புணா்வு முகாம்

Published on

சா்வதேச மனித உரிமை தினத்தையொட்டி, பெருந்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் பெருந்துறை நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளா்கள் மற்றும் மகளிா் குழு உறுப்பினா்களுக்கு இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில், பெருந்துறை சாா்பு நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.திருமலை கலந்து கொண்டு மனித உரிமைகள் தினம் குறித்தும், அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் பணிகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பின்னா், முகாமில் கலந்து கொண்டவா்கள் கேட்ட சட்டம் சாா்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com