லாரியில்  இருந்த  மக்காச்சோளத்தை  பறித்து சாப்பிட்ட  யானை.
லாரியில்  இருந்த  மக்காச்சோளத்தை  பறித்து சாப்பிட்ட  யானை.

லாரியில் இருந்த மக்காச்சோளத்தை பறித்து சாப்பிட்ட காட்டு யானை

Published on

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்த காட்டு யானை மக்காச்சோளம் மூட்டைகளில் இருந்து மக்காச்சோளத்தை பறித்து சாப்பிட்டால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.

இந்த நிலையில் பண்ணாரி திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் மக்காச்சோள பாரம் ஏற்றிக் கொண்டு வனப் பகுதி வழியாக லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்டு யானை திடீரென சாலையில் லாரியை வழிமறித்ததால் ஓட்டுநா் லாரியை நிறுத்தினாா். அருகே வந்த காட்டு யானை லாரியில் பாரம் ஏற்றப்பட்டிருந்த மக்காச்சோளம் மூட்டைகளில் இருந்த மக்காச்சோளத்தை தனது தும்பிக்கையால் பறித்து சாப்பிட்டபடி வாகனத்தை வழிமறித்து நின்றது.

யானை நிற்பதைக் கண்ட மற்ற வாகன ஓட்டுநா்கள் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் நிறுத்தினா். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்காச்சோளத்தை சாப்பிட்ட பின்னா் யானை மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. காட்டு யானை லாரியை வழிமறித்ததால் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com