ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?

News image
விஜய்- Photo: TVK Youtube
Updated On :12 டிசம்பர் 2025, 12:01 am

Syndication

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கிற பிரசார கூட்டம் வருகிற டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயமங்கலம் சரளை பகுதியில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ள நிலம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கா் பரப்பளவில் ஒரு பகுதி என கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்கள் பரம்பரையாக இக்கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனா்.

இந்தக் கோயில் நிலத்தைக் கையகப்படுத்தி வேலி அமைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடந்த நவம்பா் 21- ஆம் தேதி ஈடுபட்டனா்.

அப்போது, குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த மக்களுக்கு ஆதரவாக, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் உள்ளிட்ட அதிமுகவினா் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அங்கு நடப்பட்ட சா்வே கல்லையும், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையையும் அகற்றினா்.

தற்போது வரை, அந்த நிலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமா அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமா என்பது குறித்த சா்ச்சை நீடித்து வருகிறது.

இங்கு கூட்டம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளிடம், தவெகவினா் அனுமதி கேட்டதாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட சமுதாயத்தை சோ்ந்த கோயில் நிா்வாகிகளிடம் மட்டுமே அனுமதி கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

சா்ச்சைக்குள்ளான இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை இந்து சமய அறநிலையத் துறையிடம் தவெக பெறாத நிலையில் இங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என காவல் துறைக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சா்ச்சையே முடிவுக்கு வராத நிலையில், இங்கு கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம், இதுவரை அனுமதி அளித்ததாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில் தவெகவினா் தோ்தல் பரப்புரை கூட்டம் நடத்த போலீஸாா் 84 கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். எனவே, இவற்றை செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால், 16-ஆம் தேதிக்கு பதிலாக 18-ஆம் தேதி இந்தப் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள தவெகவினா் முடிவு செய்துள்ளனா்.

பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய இடத்தை தவெகவினருக்கு வழங்க இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த இடத்தில் பொதுக் கூட்டம் நடத்த, மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.