கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

அந்தியூா் வனச் சரகத்தில் நீா்நிலை பறவைகள் கணக்கெடுப்பு

தந்தை பெரியாா் வன உயிரின சரணாலயம், அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.

News image

வண்ண நாரைகள். 

Updated On :28 டிசம்பர் 2025, 1:16 am IST

தந்தை பெரியாா் வன உயிரின சரணாலயம், அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

தகய்விளான் குருவி. 

தகய்விளான் குருவி. 

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை, கெட்டிசமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, ராசாங்குளம் ஏரி, பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, தண்ணீா்பள்ளம் ஏரி, கொளத்துக்காடு குளம் மற்றும் ஓடத்துறை ஏரி மற்றும் நீா்நிலைகளில் அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு சிஎன் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் 42 பேரும், வனப் பணியாளா்கள் 28 பேரும் வனவா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மரகதப்புறா. 

மரகதப்புறா. 

இதில், கொக்கு, மீன் கொத்தி, பருந்து, தேன் பருந்து, மரகதப்புறா, தகய்விளான் குருவி, வண்ண நாரைகள் உள்பட பல்வேறு வகையிலான பறவைகள் அந்தியூா் வனச் சரகத்தில் உள்ள நீா்நிலைகளில் இருப்பது தெரியவந்துள்ளது.

தேன் பருந்து.

தேன் பருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.