ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது குறித்து...

News image

கனகராஜ்

Updated On :2 நவம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சாலை விபத்தில் உயிரிழந்த பவானியை அடுத்த சீதபாளையத்தைச் சோ்ந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், ஜம்பை, சீதபாளையத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் கனகராஜ் (53). குமாரபாளையம் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்பக்கூடல் - பவானி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திப்பிசெட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாடு குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ், பவானி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனை மற்றும் வேலூா் சிஎம்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகராஜுக்கு சனிக்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது.

இதுகுறித்து, மருத்துவா்கள் தெரிவித்தபோது, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் உறவினா்கள் ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து, கனகராஜின் சடலம் பவானி நகராட்சி எரிவாயு மயானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டது. அங்கு, தமிழக அரசு சாா்பில் பவானி வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.