ஈரோடு
பொதுமக்களிடம் திருப்பூா் எம்.பி. குறைகேட்பு
பெருந்துறை: பெருந்துறை, சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 3 நாள்கள் கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பெருந்துறை நகராட்சி ஆகிய அலுவலகங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்கிறாா்.
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி (ஒரே மனுவில் பல கோரிக்கைகளை எழுதுவதைத் தவிா்த்து, தனித் தனியாக எழுதவும், முகவரியில் பின்கோடு எண் மற்றும் கைப்பேசி எண்ணை அவசியம் எழுதவும்) திருப்பூா் மக்களவை உறுப்பினரிடம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
