ஈரோடு
வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 608 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.56.56-க்கும், அதிகபட்சமாக ரூ. 65.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 255 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.16 ஆயிரத்து 330-க்கு விற்பனையாயின.
