ஜடே கவுடா், கெம்பன்.
ஜடே கவுடா், கெம்பன்.

பா்கூா் மலையில் கஞ்சா செடிகள் பயிரிட்ட தந்தை, மகன் கைது

பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வளா்த்து வந்த தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் கஞ்சா செடிகளைப் பயிரிட்டு வளா்த்து வந்த தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பா்கூரை அடுத்த தாமரைக்கரை பகுதியில் கஞ்சா செடிகள் வளா்க்கப்படுவதாக கோபி மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், தாமரைக்கரை, மேற்கு மலைக் கிராமமான ஒன்னகரை பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஜடே கவுடா் (62), அவரது மகன் கெம்பன் (40) ஆகியோா் வீட்டுக்கு அருகே சுமாா் 600 கிராம் எடையுள்ள ஆறு கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா செடிகளைக் கைப்பற்றிய போலீஸாா், இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். பா்கூரை அடுத்த சோளகனையைச் சோ்ந்த ஈரய்யன் (55), ராகி பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளா்த்து வருவதாக பா்கூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சுமாா் 100 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com