ஈரோட்டில் டிசம்பா் 6-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஈரோடு வேளாளா் கல்லூரியில் டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பா் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியாா் துறை வேலை அளிப்பவா்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனா். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், செவிலியா், மருந்தாளுநா் பயிற்சி முடித்தவா்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறையில் பணியமா்த்தம் செய்யப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
