வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
Published on

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,533 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.55-க்கும் ஏலம் போனது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட தேங்காய்கள், ரூ.23 ஆயிரத்து 601-க்கு விற்பனையானது.

X
Dinamani
www.dinamani.com