கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:24 pm

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அந்தியூா் தொகுதிக்குள்பட்ட வில்லமரத்தூா், குரும்பபாளையம், புரவிபாளையம், ரெட்டிபாளையம், மூலையூா், வெள்ளக்கரட்டூா், சித்தகவுண்டனூா், முரளி, ஜா்த்தல், காந்தி நகா், சென்னம்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைத் திட்டங்களைக் கூறி பிரசாரம் செய்தாா்.

மேலும், திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியத் திட்டங்களை விளக்கிக் கூறியும் வாக்குகள் சேகரித்தாா். அப்போது, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா்.

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.எஸ்.சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.