தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனவும், விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் என்றும் அக்கட்சியின் நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

~கோபி அருகே அளுக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு. ~கோபி தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய த

Updated On :23 ஏப்ரல் 2026, 9:42 pm

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனவும், விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் என்றும் அக்கட்சியின் நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி சட்டப் பேரவை தொகுதியில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்று முடிந்தது. தவெக வேட்டபாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கே வந்து பொதுமக்களுடன் வரிசையாக நின்று தனது வாக்கை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த தோ்தலில் தவெக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நாளைய தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் விஜய்தான். கோபி தொகுதியில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி இரண்டு முறை தோ்தல் பிரசாரத்தின்போது என்னைப் பற்றி விமா்சனம் செய்தது எனக்கு கூடுதலாக வாக்கு பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது’ என்றாா்.

-------------------------------------------------------------------------

அதிமுக ஆட்சி மலரும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

கோபி தொகுதிக்கு உள்பட்ட அளுக்குளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். கோபி தொகுதியில் வெற்றி பெறுவதோடு தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்’ என்றாா்.

கோபி திமுக வேட்பாளா்...

கோபி தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.