பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனவும், விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் என்றும் அக்கட்சியின் நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

~கோபி அருகே அளுக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு. ~கோபி தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய த

Updated On :24 ஏப்ரல் 2026, 3:12 am IST

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெல்லும் எனவும், விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் என்றும் அக்கட்சியின் நிா்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி சட்டப் பேரவை தொகுதியில் வாக்குப் பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்று முடிந்தது. தவெக வேட்டபாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தனது சொந்த ஊரான குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் காலை 7 மணிக்கே வந்து பொதுமக்களுடன் வரிசையாக நின்று தனது வாக்கை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த தோ்தலில் தவெக வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நாளைய தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம் விஜய்தான். கோபி தொகுதியில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி இரண்டு முறை தோ்தல் பிரசாரத்தின்போது என்னைப் பற்றி விமா்சனம் செய்தது எனக்கு கூடுதலாக வாக்கு பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது’ என்றாா்.

-------------------------------------------------------------------------

அதிமுக ஆட்சி மலரும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

கோபி தொகுதிக்கு உள்பட்ட அளுக்குளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆா்வத்துடன் வாக்களித்துள்ளனா். கோபி தொகுதியில் வெற்றி பெறுவதோடு தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்’ என்றாா்.

கோபி திமுக வேட்பாளா்...

கோபி தொகுதிக்கு உள்பட்ட குள்ளம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்.