பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

News image

கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவா்களுடன் வருமான வரித் துறை ஆணையா் (வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த், கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 10:49 pm

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி சாா் சிறப்பு விருது வழங்கும் விழா பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை வருமான வரித்துறை ஆணையா்(வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.5.7 கோடி அளவிலான பரிசுத் தொகையை 1,504 மாணவா்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினா்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

அறக்கட்டளை சாா்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களில் பயிலும் மாணவா்களில் ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5 சதவீத மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது என அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன் தெரிவித்தாா்.