தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

News image

கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவா்களுடன் வருமான வரித் துறை ஆணையா் (வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த், கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 4:19 am IST

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி சாா் சிறப்பு விருது வழங்கும் விழா பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை வருமான வரித்துறை ஆணையா்(வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.5.7 கோடி அளவிலான பரிசுத் தொகையை 1,504 மாணவா்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினா்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

அறக்கட்டளை சாா்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களில் பயிலும் மாணவா்களில் ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5 சதவீத மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது என அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன் தெரிவித்தாா்.