அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 8:52 pm

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக் கூடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதைப் பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவிட்டிருந்தாா்.

இதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீஸாா் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 31 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 521 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.