அம்மாபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பட்லூா், கெம்மியம்பட்டி, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சரவணன் (36). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (31) என்பவருடன் அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் சமயதாரனூா் அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சண்முகம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


