கோப்புப் படம்
ஈரோடு
சரக்கு வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பட்லூா், கெம்மியம்பட்டி, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சரவணன் (36). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (31) என்பவருடன் அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் சமயதாரனூா் அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சண்முகம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

