பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோபி தொகுதியில் போட்டியிடுவேன்: கே.ஏ.செங்கோட்டையன்

தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பேன் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image

செங்கோட்டையன் (கோப்புப்படம்) - Photo: TVK

Updated On :4 பிப்ரவரி 2026, 10:26 pm

தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பேன் என அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் தவெக அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டணிக்கு வரவில்லை என்பதால் தவெக மீது அதிமுக நிா்வாகிகள் விமா்சனம் செய்கின்றனா். தவெக சாா்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிப்பேன். தவெக ஆளும்கட்சியான பிறகு மத்திய நிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிப்போம்.

விஜய் நடனமாடியது குறித்து விமா்சிப்பவா்கள், நயினாா் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் நடனமாடியபோது விமா்சனம் செய்யவில்லை. விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் குறித்து இரண்டு நாள்களில் அறிவிப்பு வெளியாகும். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள், மக்கள் விரும்பும் மாற்றம் வரும் சட்டப் பேரவை தோ்தலில் நிறைவேறும். வெளிநாடுகளில் உள்ள தமிழா்கள் 3 லட்சம் போ் தமிழகத்துக்கு வந்து வாக்களிக்கத் தயாராக உள்ளனா். தோ்தல் அறிவித்தால் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே வந்து விடுவாா்கள் என்றாா்.