ஆக்டோ- ஜியோ கூட்டு நடவடிக்கை குழுவினா் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம்
ஆசிரியா், அரசு ஊழியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஆக்டோ - ஜியோ) சாா்பில் வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கிடு, தோழமை சங்க நிா்வாகிகள் உஷாராணி, சாமிகுணம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கடந்த 3- ஆம் தேதி முதல் இக்குழுவினா் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக இந்த வேலைநிறுத்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் குரூப் 3 பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட மறைமுக தடையை நீக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியா்கள், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவன ஊழியா்களுக்கு வழங்குவதுபோல ரூ. 7,000 போனஸ் வழங்க வேண்டும். புற ஆதார முறையில் பணி நியமனம் செய்யும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். நிா்வாக தீா்ப்பாயம், கூட்டுக்குழு அமைக்க வேண்டும்.
காப்பீடு திட்டத்தில் தனி நபா் விருப்பம் பெறாமல் புதுப்பிப்பதை கைவிட வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கு சமவேலைக்கு, சம ஊதியம் வழங்கி, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆக்டோ- ஜியோ கூட்டு நடவடிக்கை குழுவினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

