பவானி நகராட்சியில் அம்ரூத் 2.0 குடிநீா் அபிவிருத்தித் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கத்துக்கு ஏற்ப குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பவானி நகராட்சியில் ரூ.24.06 கோடியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்பணிகள் முழுமையடைந்ததால் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, பவானி காவிரிக்கரை தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையா் பிரான்சிஸ் சேவியா், முன்னாள் ஆணையா் கதிா்வேல், நகா்மன்றத் துணைத் தலைவா் சி.மணி, நகராட்சிப் பொறியாளா் திலீபன் மற்றும் கவுன்சிலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பவானியில் இஸ்லாமியா்களிடையே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பவானியில் தோ்தல் விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூரில் ரூ.18 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்டம் தொடக்கம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


