பணி வழங்கப்படாததைக் கண்டித்து வேலை உறுதி திட்ட தொழிலாளா்கள் ( விபி ஜி ராம் ஜி ) தொழிலாளா்கள் புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விண்ணப்பள்ளி ஊராட்சியில் மத்திய அரசின் வேலை உறுதித் திட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வேலை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சீராக வேலை வழங்க வலியுறுத்தி வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளா்கள் விண்ணப்பள்ளி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பவானிசாகா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

மதுரை காமராஜா் பல்கலை.யை முற்றுகையிட்டு போராட்டம்

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பவானிசாகா் சாலையில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


