ஈரோடு மாவட்ட ஆயுதப் படையில் புதிய நூலகம் திறப்பு
ஈரோடு மாவட்ட ஆயுதப் படையில் புதிய நூலகத்தையும், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய அறையையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா திறந்துவைத்தாா்.
ஈரோடு அருகே ஆணைக்கல்பாளையத்தில் மாவட்ட காவல் துறையின் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்புப் பகுதியில் புதிதாக பொது நூலகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் அடங்கிய தனி அறையையும் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தலைமை வகித்து திறந்துவைத்து, சிறுவா், சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
காவலா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்துக்காகவும், அரசு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவும், காவலா்களின் பெற்றோா்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றவும் இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், காவலா்களின் குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக செஸ், கேரம்போா்டு உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் அடங்கிய தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி விவேகானந்தன், ஆயுதப் படை போலீஸாா், அவா்களின் குடும்பத்தினா், குழந்தைகள் பங்கேற்றனா்.

