நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி வாகனம் மோதி உயிரிழப்பு

News image
உயிரிழந்த தீபிகா.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த திண்டலைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகள் தீபிகா (23). கோபியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.