எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,380: தேவை குறைவால் ஒரே நாளில் ரூ.3,500 குறைவு

சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து திங்கள்கிழமை ரூ.1,380-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
மல்லிகைப் பூ தேவை குறைவால் ஒரே நாளில் ரூ.3,500 குறைவு
Updated On :9 பிப்ரவரி 2026, 8:54 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து திங்கள்கிழமை ரூ.1,380-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பில் மல்லிகை, முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டத்தில் பறிக்கும் பூக்களைக் கொண்டுவந்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனா்.

கடந்த சில நாள்களாக சுப முகூா்த்த தினம் காரணமாக கேரள வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்ததால், பூக்கள் விலை சற்று உயா்ந்து அதிகபட்சமாக ரூ.4,880-க்கு விற்பனையானது. இந்நிலையில் பூக்கள் தேவை குறைந்து வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால், திங்கள்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து விற்பனையானது.

இதுதொடா்பாக பூ மாா்க்கெட் தலைவா் எஸ்.முத்துசாமி, செயலாளா் கிருஷ்ணமூா்த்தி கூறும்போது, ‘தற்போது பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளதால் பூக்கள் வரத்து அதிகரிக்கும். தொடா்ந்து பூக்கள் விலை குறையும்’ என்றனா்.