மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரீடு நிறுவன சமூக சேவைக்கு விருது

ரீடு நிறுவனத்தின் சமூக சேவைக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

News image

சமூக  சேவைக்காக  அமைச்சா்  சி.வி.கணேசனிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்ட ரீடு நிறுவன  இயக்குநா்  இரா.கருப்புசாமி.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:53 pm

சத்தியமங்கலம்: ரீடு நிறுவனத்தின் சமூக சேவைக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

கடந்த 26 ஆண்டுகளாக விளிம்புநிலை மக்கள், பழங்குடியினா், தலித் மக்கள் மற்றும் தொழிலாளா் நலனுக்காக அரசுடன் இணைந்து ரீடு சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூா், நாமக்கல், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறது.

இந்நிலையில், தொழிலாளா் நலனில் அரசுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியதற்காக, அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ரீடு நிறுவனத்துக்கு விருது வழங்கி அரசு கெளரவித்தது. இந்த விருதை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் வழங்க ரீடு நிறுவன இயக்குநா் இரா.கருப்புசாமி பெற்றுக்கொண்டாா்.