விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

அந்தியூரில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

விலையில்லா மடிக்கணினிகள் பெற்ற மாணவியருடன் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், முதல்வா் விமலாதேவி, பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் உள்ளிட்டோா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 175 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விமலாதேவி தலைமை வகித்தாா். அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் இக்கல்லூரியில் பயிலும் 175 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினாா்.

இதில், திமுக பேரூா் செயலாளா் காளிதாஸ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியா் திருமாவளவன், பேரூராட்சி கவுன்சிலா்கள் சேகா், கவிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.