மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எலத்தூா் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளைத் தொடங்க உள்ளனா்.

இந்நிலையில், எலத்தூா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்படும் என்றும், குடியிருப்புகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அருகில் பல்லுயிா் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நாகமலை குன்றும் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, நம்பியூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் யோகா பழனிசாமி தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.எஸ். பழனிசாமி, மத்திய ஒன்றியச் செயலாளா் மணிகண்ட மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றக்கோரியும் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். பின்னா் கோரிக்கை குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.