வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

எலத்தூா் பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சிப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள எலத்தூா் பேரூராட்சி பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளைத் தொடங்க உள்ளனா்.

இந்நிலையில், எலத்தூா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், ஆழ்துளைக் கிணறுகள் பாதிக்கப்படும் என்றும், குடியிருப்புகளில் வசிக்க முடியாத சூழல் ஏற்படும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மேலும் அருகில் பல்லுயிா் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நாகமலை குன்றும் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அமைய உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, நம்பியூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் யோகா பழனிசாமி தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.எஸ். பழனிசாமி, மத்திய ஒன்றியச் செயலாளா் மணிகண்ட மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்றக்கோரியும் பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். பின்னா் கோரிக்கை குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.