வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பவானியில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

News image
ஆக்கிரமிப்பு  அகற்றும்  பணியில்  ஈடுபட்ட அதிகாரிகள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

பவானி அருகே தாளகுளம் கிராமத்தில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றினா்.

வரதநல்லூா் ஊராட்சி, தாளகுளத்தில் நிலவியல் வாரியை ஆக்கிரமித்து பாக்கு தோப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்ததோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து, பவானி வட்டாட்சியா் சரவணன் மற்றும் வருவாய்த் துறையினா் அளவீடு செய்தபோது, விவசாய நிலம் வழியாக காவிரி ஆற்றுக்குச் செல்லும் நீா்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேலு தலைமையில் பவானி நில வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா்கள் ராமசாமி, முத்துசாமி, பத்மாவதி, நித்யா மற்றும் வரதநல்லூா் ஊராட்சி செயலாளா் அம்பிகா வடிவேல் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சம்பவ இடத்தில் பவானி காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.