சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டறிக்கைகள் ஈரோட்டில் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
ஈரோடு மாநகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரவை மாநில துணைச்செயலாளா் எஸ்.வீரக்குமாா் தலைமை வகித்து, ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் வணிகா்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினாா்.
அதில் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும், ஆண்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், கல்விக்கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துவது, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு உருளைகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன.
துண்டறிக்கைகளை அதிமுகவினா் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளா் ஜெயபாலாஜி, மாவட்ட இணைச் செயலாளா் ஆவின் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் பரிமளா ராஜேந்திரன், மாவட்ட எம்ஜிஆா் பேரவை இணைச் செயலாளா் எஸ்.ஆா்.ஜி.மூா்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளா் பிரபு, துணைத் தலைவா் கலா சண்முகம், முன்னாள் கவுன்சிலா் கலா, கணேசன், கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவை தோ்தலில் எங்கள் கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன்

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடரமாட்டாா்: மு. தம்பிதுரை

பாமக விழிப்புணா்வு பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


