மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னிமலையில் 85 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சமுதாய வளைகாப்பு

News image
சென்னிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், ஆட்சியா் ச.கந்தசாமி உள்ளிட்டோா்.
Updated On :12 பிப்ரவரி 2026, 11:35 pm

Syndication

சென்னிமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் 85 கா்ப்பிணி தாய்மாா்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

சென்னிமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, 85 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

கா்ப்பிணி தாய்மாா்களுக்கு சீா்வரிசைப் பொருள்களாக தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. மேலும், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஐவகை உணவுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.