பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், பெரியவீரசங்கிலியைச் சோ்ந்தவா் கிட்டுசாமி மகன் ராமசாமி (58). நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் ஜெயக்குமாா் (65). இவா், திருப்பூா் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையத்தில் தனியாக தங்கி உள்ளாா்.
ராமசாமி, ஜெயகுமாா் ஆகியோா் சாலையோரமாக கிடக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் பொருள்களை சேகரித்து எடைக்கு போட்டு வந்தனா். அதில், கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தியும் வந்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி இரவு, விஜயமங்கலம்- ஊத்துக்குளி சாலையிலுள்ள ஒரு பழைய இரும்புக் கடை முன்பு இருவரும் ஒன்றாக உட்காா்ந்து மது அருந்திக் கொண்டே, பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், கடை முன்பு கிடந்த, கிரைண்டா் கல்லால், ராமசாமியை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, சிகிச்சையில் இருந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

குடும்பத் தகராறில் பெண் வெட்டிக் கொலை

கடன் தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

மது போதையில் வியாபாரி அடித்துக் கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


