மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சத்தியமங்கலத்தில் 688 பேருக்கு வீட்டுமனைப் பட்டா! நீலகிரி எம்.பி. ஆ.ராசா வழங்கினாா்!

News image

பயனாளிக்கு  இலவச  வீட்டுமனைப்  பட்டா  வழங்குகிறாா்  நீலகிரி  மக்களவைத் தொகுதி  உறுப்பினா்  ஆ .ராசா.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:35 pm

சத்தியமங்கலத்தில் 688 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.ராசா வழங்கினாா்.

சத்தியமங்கலம் நகராட்சி, தோப்பூா் என்ற பகுதியில் 50 ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனா். இதுதொடா்பாக நீலகிரி எம்.பி. ஆ.ராசாவிடமும் கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறி பட்டா வழங்க ஏற்பாடு செய்தாா்.

அதன்படி சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் 688 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

நீண்ட கால போராட்டத்துக்குப் பின் சத்தியமங்கலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8,000 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்னும் சில தினங்களில் 2,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படும். நாட்டிலேயே கிராமப்புற பொருளாதாரம் தமிழ்நாட்டில் தான் உயா்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வா்தான் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகிராமசாமி, பவானிசாகா் பேரூராட்சித் தலைவா் மோகன், ஒன்றியச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.