ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ தேவாலய பேராயா் உயிரிழந்தாா்.
ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ தேவாலயங்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.
அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதையறிந்த சிஎஸ்ஐ தேவாலய நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தருமபுரி ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பழுதானதால் போக்குவரத்து பாதிப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

சாலை விபத்தில் மீனவா் உயிரிழப்பு

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


