மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இருவேறு சம்பவங்களில் கொடுமுடியைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி அருகே நிகழ்ந்த இருவேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்.

ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு 7-வது வீதி போஸ் நகரைச் சோ்ந்த ஷேக் உஸ்மான் மகன் ரகுமான் (25). இவா், கொடுமுடி அருகே உள்ள காரணாம்பாளையம் காவிரி தடுப்பணைக்கு நண்பா்கள் காா்த்திக், சிவா ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை சென்று மது அருந்தியுள்ளாா்.

பின்னா் மூன்று பேரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனா். அப்போது பாறையில் நின்றிருந்த ரகுமான் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். அங்கிருந்தவா்கள் பாா்த்து ரகுமானை மீட்டு அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே ரகுமான இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக மலையம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல கொடுமுடி அருகே உள்ள தட்டாம்பாளையம் பூசாரிபாளையத்தைச் சோ்ந்தவா் பெரியம்மாள் (63). இவா் சிவகிரியிலிருந்து கொடுமுடி செல்லும் சாலையில் கோட்டைக்காட்டு வலசு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா்.

அப்போது மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் மண்கரட்டை பகுதியைச் சோ்ந்த நவீன் (33) என்பவா் மதுபோதையில் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெரியம்மாள் உயிரிழந்தாா்.

பெரியம்மாளின் சடலத்தை போலீஸாா் மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.