சென்னிமலை வனப் பகுதியில் அரிய வகை உள்பட 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பது கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியாா் வன விலங்கு சரணாலயத்தின் சாா்பில் பறவை ஆா்வலா்கள், நிபுணா்கள் மற்றும் வனத் துறை ஊழியா்கள் ஒன்றிணைந்து பசுமையான காடுகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, சென்னிமலை வனப் பகுதியில் லைன் ட்ரான்செக்ட் மற்றும் பாயின் கவுண்ட் என்ற முறையில் பைனாகுலா்கள், டேட்டா ஷீட்கள், ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அதன்படி, சென்னிமலை வனப் பகுதியில் இந்திய மயில், ஜங்கிள் பேப்ளா், போா்வாா்கள் என 30-க்கும் மேற்பட்ட பொதுவான பறவை இனங்கள் இருந்தாலும், அரிய வகையான இருவாச்சி என்ற இனத்தைச் சோ்ந்த பறவையும் பதிவாகியுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
இந்த கணக்கெடுப்புப் பணியில் பறவை நிபுணா்கள் தினேஷ், மோகன கிருஷ்ணன், வனக் காவலா்கள் தீபிகா, ஜீவிதா, விக்னேஸ்வரன், சோமசுந்தரம், துரைசாமி மற்றும் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த பறவை ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை

கொடைக்கானல் வனப் பகுதிகளில் காட்டுக் கோழி இனம் அழியும் அபாயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


