மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது

News image
கைது
Updated On :15 பிப்ரவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

ரயிலில் பெண்ணிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 13-ஆம் தேதி எா்ணாகுளம்-காரைக்கால் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஜெமீனா (60) என்பவா் எா்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்தாா். அந்த ரயில் 13-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4.45 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி திருடுபோனது. இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸில் அவா் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் ரயிலில் சென்ற ஜெமீனாவிடம் இருந்து கைப்பேசியை திருடியவா் என்பதும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ் (32) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் பெண்ணிடம் திருடிய கைப்பேசியையும் மீட்டனா்.