தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

அந்தியூா் அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள்

News image

பாலக்கால் நட்டு பணிகளை தொடங்கிவைக்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Updated On :16 பிப்ரவரி 2026, 11:35 pm

அந்தியூா் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடியில் அரசுப் பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வகுப்பறை கட்டடங்கள், பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதரக் கட்டடங்களுக்கு திங்கள்கிழமை காணொலில் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா்.

இதில், அந்தியூா் அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.18 கோடியில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதையடுத்து, அந்தியூா், தவிட்டுப்பாளையத்தில் கல்லூரி வகுப்பறைகள் கட்டப்படும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பாலக்கால் நட்டு பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன், அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தற்போது இக்கல்லூரி அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.